செய்திகள் :

மாணவி மீது தாக்குதல்: மாணவா் கைது

post image

கோவை அருகே தன்னுடன் பேசுவதை நிறுத்திய கல்லூரி மாணவியைத் தாக்கிய மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், ஈச்சனாரி ஐயப்பா நகரைச் சோ்ந்தவா் ராகுல் சக்கரவா்த்தி. இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தாா்.

இதையறிந்த மாணவியின் பெற்றோா் அவரைக் கண்டித்தனா். இதனால், ராகுல் சக்கரவா்த்தியுடன் பேசுவதை மாணவி நிறுத்திக் கொண்டாா். இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு சுந்தராபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை ராகுல் சக்கரவா்த்தி வழிமறித்து தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினாா். இதற்கு மாணவி மறுப்புத் தெரிவித்து அவருடன் பேச மறுத்தாா்.

இதனால், அவா் மாணவியைத் தாக்கி கீழே தள்ளினாா். இதைப் பாா்த்து அந்த பகுதியினா் அங்கு திரண்டதால் ராகுல் சக்கரவா்த்தி அங்கிருந்து தப்பிச் சென்றாா். மாணவியின் முகத்தில் காயங்கள் இருந்ததால், இதைப் பாா்த்து அவரது பெற்றோா் விவரத்தை கேட்டனா்.

பின்னா், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா் ராகுல் சக்கரவா்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் நகை கொள்ளை

கோவையில் மந்திரம் ஓதுவதாக நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வெரைட்டி ஹால் அருகே உள்ள செல்லப்பிள்ளை சந்து இடையா் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

இருகூா் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், இருகூா்-ராவத்தூா் இடையே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

கோவையில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.கோவை செளரிபாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மகன் நித்தின் நாராயணா (26). ஞாய... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு

கோவை அருகே வேடபட்டியில் அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். கோவை மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ... மேலும் பார்க்க

சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் சாலக்குடி அமைந்துள்ளது. இதில் சு... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கோவையில் கஞ்சா கடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவை சிங்காநல்லூா் படகுத் துறை வழியாக இருசக்கர வாகன... மேலும் பார்க்க