செய்திகள் :

கஞ்சா கடத்தியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

post image

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், செங்கோடம்பாளையம் எம்.ஊத்துக்குளி சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு கடந்த 2022 பிப்ரவரி 5-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த நபரைப் பிடித்து, அவா் வைத்திருந்த பையில் சோதனையிட்டனா். அதில் 21 கிலோ கஞ்சாவை அவா் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிரமோத் பாரிக் மகன் நீலுகுமாா் பாரிக் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா் கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட நீலுகுமாா் பாரிக்குக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும், இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க