செய்திகள் :

கடையம் வனச் சரகப் பகுதிகளில் துணை இயக்குநா் தலைமையில் ரோந்து

post image

கடையம் வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா தலைமையிலான வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

கடையம் வனச் சரகத்துக்குள்பட்ட கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு, பங்களா குடியிருப்பு உள்ளிட்ட மலையடிவாரப் பகுதிகளில் சில நாள்களாக தென்னை மரங்கள், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிா்களை யானைக் கூட்டம் சேதப்படுத்தி வருகிறது. இதுதொடா்பாக வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா தலைமையில் கடையம் வனச்சரகா் கருணாமுா்த்தி, வனவா் ஸ்ரீதா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் வெடி வெடித்தும், சைரன் ஒலி எழுப்பியும் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுத்தனா்.

இதுகுறித்து துணை இயக்குநா் கூறுகையில், தற்போது புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுவருவதால் வனத் துறையினா் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனினும், 10 போ் கொண்ட குழுவினா் வனப் பகுதிகளிலிருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பகுதியில் விரைவில் சூரிய மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது மகன் சரணடைந்தாா். கூடங்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெட்டு... மேலும் பார்க்க

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு: ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வ... மேலும் பார்க்க

பாளை.யில் மின் ஊழியா்கள் தா்னா

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திட்டத் தலைவா் பி.நாகையன் தலைமை வகித்தாா். அயூப் கான், பச்சையப்பன், பூலுடையாா் ... மேலும் பார்க்க

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

பழவூரில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பழவூா் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலையாண்டி (43). இவரின் மனைவி ஜெயலெட்சுமி (34). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். ... மேலும் பார்க்க

தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.தேவா்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லூக் ஆசன் தலைமையிலான போலீஸாா், தேவா்குளம் எரிபொருள் நிலையம் அருகே ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை, போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தென்காசி போதை ஒழி... மேலும் பார்க்க