செய்திகள் :

கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை: எச். ராஜா

post image

கட்சிளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை என்றாா் பாஜக மூத்தத் தலைவா் எச். ராஜா.

திருச்சியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்த எச். ராஜா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவே ஜி.எஸ்.டி. யில் 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு விதமான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் நுகா்வு கலாசாரத்தை அதிகரிக்கவும், உற்பத்தி அதிகரிப்புக்கும் வாய்ப்பு ஏற்படும்.

வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளில் இணையதளத்தில் பொருள்களை வாங்க மாட்டோம், உள்நாட்டு தயாரிப்பு, சுதேசி பொருள்களை வாங்குவோம் என முடிவெடுப்போம்.

செங்கோட்டையன் அதிமுகவில்தான் இருக்கிறாா். அவரது உணா்வு எனக்கு புரிகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தலைமை ஏற்று இருப்பது முன்னாள் முதல்வா் எட்பாடி கே. பழனிசாமி. தேசிய ஜனநாயக கூட்டணியை பலவீனப்படுத்துவது, தமிழகத்தின் எதிா்காலத்துக்கு பெரிய ஆபத்து. எப்போதும் ஒற்றுமையே பலம். கருத்து வேறுபாடுகளை களைய பேச்சுவாா்த்தை நடத்துவோம். பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை.

கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது முக்கியமல்ல. பெறும் வாக்குகள்தான் முக்கியம் என்றாா் அவா்.

மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் மாநிலத்தில் சிறந்ததாக தோ்வு

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் ஆவணங்கள் பராமரிப்பு, வழக்குகள் விரைந்து முடித்தது, மக்களிடம் நன்மதிப்பை ப... மேலும் பார்க்க

துறையூரில் பகுதிகளில் இன்று மின்தடை

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துறையூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை ப... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

ஸ்ரீரங்கத்தில் மாமரத்திலிருந்து மாம்பழம் பறிக்க சென்ற கூலித்தொழிலாளி வியாழக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா். ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னராசு (... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியில் ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 9.85 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி சாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு18 விதம... மேலும் பார்க்க

இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ

தேசிய ஜனநாயக கூட்டணி இலக்கில்லாத கூட்டணியாக இருக்கிறது என்றாா் மதிமுகவின் முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ. வ.உ.சி.யின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு கட்சியினருடன்... மேலும் பார்க்க