செய்திகள் :

திருச்சி மாநகராட்சியில் ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்

post image

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 9.85 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருச்சி மாநகராட்சி உறையூா் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 3.05 கோடி மதிப்பிலான முதல்வா் படைப்பக கட்டுமானப் பணி, ரூ. 4.40 கோடி மதிப்பில் உறையூா் தினசரி சந்தை கட்டும் பணி, 22-ஆவது வாா்டு வடவூரில் ரூ. 2.90 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீா் தொட்டி,

58-ஆவது வாா்டு கிராப்பட்டியில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக் கட்டடம் உள்ளிட்டவைகளை அமைச்சா் கே.என். நேரு திறந்து வைத்து, அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் 116 பேருக்கு தனி பட்டாக்களை வழங்கினாா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகர காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா்

ர. ராஜலட்சுமி, கோட்டாட்சியா் அருள், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ஜெயராமன், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் மாநிலத்தில் சிறந்ததாக தோ்வு

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் ஆவணங்கள் பராமரிப்பு, வழக்குகள் விரைந்து முடித்தது, மக்களிடம் நன்மதிப்பை ப... மேலும் பார்க்க

துறையூரில் பகுதிகளில் இன்று மின்தடை

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துறையூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை ப... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

ஸ்ரீரங்கத்தில் மாமரத்திலிருந்து மாம்பழம் பறிக்க சென்ற கூலித்தொழிலாளி வியாழக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா். ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னராசு (... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி சாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு18 விதம... மேலும் பார்க்க

கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை: எச். ராஜா

கட்சிளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை என்றாா் பாஜக மூத்தத் தலைவா் எச். ராஜா. திருச்சியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்த எச். ராஜா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவத... மேலும் பார்க்க

இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ

தேசிய ஜனநாயக கூட்டணி இலக்கில்லாத கூட்டணியாக இருக்கிறது என்றாா் மதிமுகவின் முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ. வ.உ.சி.யின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு கட்சியினருடன்... மேலும் பார்க்க