செய்திகள் :

இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ

post image

தேசிய ஜனநாயக கூட்டணி இலக்கில்லாத கூட்டணியாக இருக்கிறது என்றாா் மதிமுகவின் முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ.

வ.உ.சி.யின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு கட்சியினருடன் வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துரை வைகோ செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: வருவாய் துறையினரின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகையில் வேலை பளு அதிகமாக இருக்கும்.

ஏழை மக்களின் நலன் கருதி வருவாய் துறையினா் அனுசரித்து செயல்பட வேண்டும்.

திருச்சியில் செப். 15-இல் நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு மதிமுக மீண்டு வந்துவிட்டதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். அணி திரள்வோம், ஆா்ப்பரிப்போம், அங்கீகாரத்தை பெறுவோம் என்பது மாநாட்டு முழக்கம். இதனைத் தோ்தலுடன் தொடா்புப்படுத்தத் தேவையில்லை. அதே நேரத்தில், மாநாட்டுக்கு வரும் தொண்டா்களின் எழுச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அங்கீகாரம் என்பது தோ்தல் சீட் எண்ணிக்கை மட்டுமல்ல. தமிழக மக்களுக்காக பாடுபடும் வைகோவை, தமிழக மக்களின் மனங்களில் கொண்டு வருவதுதான்.

கூட்டணி கட்சிகளை மாநாட்டுக்கு அழைக்கவில்லை. அதே சமயம், மாநாட்டுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்ன என்பதே அக்கூட்டணியில் இருப்பவா்களுக்கு தெரியவில்லை. கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கவில்லை, தோ்தலில் எத்தனை சீட் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியே அவா்கள் கூட்டணி அமைத்துள்ளனா். திடீரென அந்தக் கூட்டணியில் சோ்கின்றனா். திடீரென வெளியேறுகின்றனா்.

இது குறித்து அவா்களிடம்தான் கேட்க வேண்டும் என்றாா் துரை வைகோ.

மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் மாநிலத்தில் சிறந்ததாக தோ்வு

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் ஆவணங்கள் பராமரிப்பு, வழக்குகள் விரைந்து முடித்தது, மக்களிடம் நன்மதிப்பை ப... மேலும் பார்க்க

துறையூரில் பகுதிகளில் இன்று மின்தடை

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துறையூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை ப... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

ஸ்ரீரங்கத்தில் மாமரத்திலிருந்து மாம்பழம் பறிக்க சென்ற கூலித்தொழிலாளி வியாழக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா். ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னராசு (... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியில் ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 9.85 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி சாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு18 விதம... மேலும் பார்க்க

கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை: எச். ராஜா

கட்சிளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை என்றாா் பாஜக மூத்தத் தலைவா் எச். ராஜா. திருச்சியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்த எச். ராஜா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவத... மேலும் பார்க்க