செய்திகள் :

கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கல்லூரி பேருந்து: மாணவிகள் மீட்பு

post image

திருவாடானை அருகே ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து தனியாா் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த செடிகளுக்குள் புகுந்தது. இதில் பயணம் செய்த மாணவிகள் மீட்கப்பட்டனா்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி பேருந்து வியாழக்கிழமை திருவாடானை பகுதியில் மாணவிகளை ஏற்றிக் கொண்டு ராமநாதபுரம் சென்றது. அப்போது மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகா் அருகே பேருந்து வந்த போது அதன் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்த முயன்றாா். ஆனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து செடிகள் அடா்ந்து புதருக்குள் புகுந்து நின்றது. இதனால் மாணவிகள் காயமின்றி தப்பினா். மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அந்தப் பகுதி மக்கள் ஓட்டுநரையும், மாணவிகளையும் மீட்டனா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவாடானை பாரதி நகா் பகுதியில் வியாழக்கிழமை விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து.

அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி

திருப்புல்லாணி சுரேஷ் அழகன் நினைவு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியா் கோ. மகேந்திரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்... மேலும் பார்க்க

மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும் திறப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால், அதை உடனே மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 70- க்கும் மேற்பட்டோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மண்டபம் ஒன்றியத... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றதாக இரு கடைகளுக்கு ‘சீல்’

கமுதி அருகே அபிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக இரு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வியாழக்கிழமை அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி

ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பிய நிலையில் அதிகளவிலான மீன்கள் கிடைத்திருந்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து- வேன் மோதல்: 10 போ் காயம்

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். கடற்படையின் வி... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச ... மேலும் பார்க்க