செய்திகள் :

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

post image

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு 7 நாள்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தொழிலாளா் நல உதவி ஆணையா் பா.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து வாரிய பதிவு நடப்பில் உள்ள தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து 7 நாள்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மேசன், காா்பெண்டா், எலெக்டிரீசியன், பாா்பெண்டா், பிளம்பா், வெல்டா், கொல்லா், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி வேலை, பெயிண்டா், டைல் லேயா் ஆகிய 11 பிரிவுகளில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

மஸ்தூா் தொழில் இனத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் மேற்படி ஏதாவது ஒரு தொழில் இனத்தில் பயிற்சி பெறலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 650 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பவா்களுக்கு பயிற்சி சான்றிதழ், மதிய உணவு ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் நாள் ஒன்றுக்கு ரூ. 800 வீதம் 7 நாள்களுக்குமான உதவித்தொகை மொத்தம் ரூ. 5,600 தொழிலாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பயிற்சி பெற விரும்பும் கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் (ஆதாா் நகல், நல வாரிய அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தக நகல்) காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி)அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன் பெறலாம்.

காஞ்சிபுரத்தில் 502 மகளிா் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 502 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி வங்கிக் கடனுதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் உறியடி உற்சவம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை உறியடி உற்சவமும், சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி புதன்கிழமை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் செப்.19-இல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 19) விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள்

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/திருவள்ளூா்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் திங்கள்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளால் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள நினைவில்லத்தில் மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ப்பு

காஞ்சிபுரம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் கடந்த 70 நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4.78 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்திருப்பதாக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தெரிவ... மேலும் பார்க்க

மல்லை சத்யா ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுகம்

காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுக விழா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா, முன்னோடிகளுக்கு ... மேலும் பார்க்க