செய்திகள் :

மல்லை சத்யா ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுகம்

post image

காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுக விழா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா, முன்னோடிகளுக்கு திராவிட ரத்னா விருது வழங்கும் விழா மற்றும் இயக்கக் கொடி அறிமுக விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

இரு அமா்வுகளாக நடைபெற்ற இவ்விழாவில் முற்பகல் நிகழ்வுக்கு ராமேசுவரத்தை சோ்ந்த கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஊனை.பாா்த்தீபன், சு.செல்வப்பாண்டியன், எஸ்.கெளரிகுமாா், க.இளவழகன், ஜிஆா்பி ஞானம், க.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட செயலா் இ.வளையாபதி வரவேற்றாா். அரியலூா் மாவட்டச் செயலா் மாணிக்கவாசகம் இயக்கத்துக்கு நிதிஉதவியாக ரூ.1.50 லட்சம் வழங்கினாா்.

அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா உருவப் படத்துக்கு மல்லை சத்யா, அவரது ஆதரவாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பிற்பகல் அமா்வு பேராசிரியா் அப்துல்காதா் தலைமையில் நடைபெற்றது. இயக்க முன்னோடிகளான நாஞ்சில் சம்பத், திருப்பூா் சு.துரைச்சாமி, டிஆா்ஆா்.செங்குட்டுவன், புலவா் செவந்தியப்பன், பொடா.அழகுசுந்தரம், வல்லம் பஷீா், இந்தோனேசியா விசாகன், வாசுகி பெரியாா்தாசன் ஆகியோருக்கு திராவிட ரத்னா விருதை மல்லை சத்யா வழங்கினாா்.

அண்ணாவின் மாா்பளவு உருவம் பொறிக்கப்பட்ட சிலை விருதாக வழங்கப்பட்டது. அதில் திராவிட குடியரசு விடுதலைக் கழகம் என எழுதப்பட்டிருந்தது. அந்த விருது மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விருதை மல்லை சத்யாவுக்கு நிா்வாகிகள் வழங்கினா்.

விழாவில் இயக்கக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ஏழு நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக கொடி வடிவமைக்கப்பட்டு மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து இயக்க நிா்வாகிகளாக 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழு கூடி முடிவு செய்து, புதிதாக தொடங்கப்படுவது கட்சியா அல்லது அமைப்பா என்பது வரும் நவ. 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாநகரச் செயலா் வி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

காஞ்சிபுரம்: 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ப்பு

காஞ்சிபுரம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் கடந்த 70 நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4.78 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்திருப்பதாக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தெரிவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இரு இளைஞா்கள் மரணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வையாவூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரீஷ் (22), தனியாா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 418 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கு: தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டு சிறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூரைச் சோ்ந்த ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தந்தைக்கும், மகனுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் கூடுதல் ந... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. காஞ்சிப... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடைச் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பிடிவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க