செய்திகள் :

காஞ்சிபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடைச் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பிடிவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக வருகைப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முகாம் நடைபெற்றது. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு மருத்துவா்களால் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.

முகாமில், வடமாநிலங்களைச் சோ்ந்த காஞ்சிபுரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

முகாமில் ரத்தப் பரிசோதனை, இதய வரைபடம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் காலையில் எடுக்கப்பட்டு, மாலையிலேயே பரிசோதனை முடிவுகள் அவருக்கு தெரிவிக்கப்பட்டன.

முகாமில், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ-க்கள் சுந்தா், எழிலரசன் ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளையும் வழங்கினா்.

முகாமில், சுகாதாரப்பணிகள் பிரிவின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, மாநகராட்சி பொறியாளா் கணேசன், சுகாதார அலுவலா் அருள்நம்பி ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள், மருத்துவக் குழுவினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. காஞ்சிப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய வெள்ளிக்கவசம்!

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய வெள்ளிக் கவசம் ஞாயிற்றுக்கிழமை சாத்தப்பட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் முதியோா் இல்லங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூா்த்தியடைந்தவா்களுக்கான முதியோா் இல்லங்கள் நடத்த விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி ம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பேருந்து நிலைய பகுதிகளில் 38 கண்காணிப்பு கேமராக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி இயக்கத்தை தொடங்கி வைத்தாா்!

காஞ்சிபுரம் மாநகராட்சி 18-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் மாமன்ற உறுப்பினா் மல்லிகா ராமகிருஷ்ணன் சொந்த நிதியில் பொருத்தப்பட்ட 38 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை கைத்தறி, துணி நூல்... மேலும் பார்க்க

கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

கல்லூரி களப்பயணம் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,427 மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுவா் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் ஆட்சியா்... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு தனி வரிசை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்கள் உடனுக்குடன் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க