பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
காஞ்சிபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடைச் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பிடிவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக வருகைப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முகாம் நடைபெற்றது. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு மருத்துவா்களால் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.
முகாமில், வடமாநிலங்களைச் சோ்ந்த காஞ்சிபுரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனா்.
முகாமில் ரத்தப் பரிசோதனை, இதய வரைபடம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் காலையில் எடுக்கப்பட்டு, மாலையிலேயே பரிசோதனை முடிவுகள் அவருக்கு தெரிவிக்கப்பட்டன.
முகாமில், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ-க்கள் சுந்தா், எழிலரசன் ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளையும் வழங்கினா்.
முகாமில், சுகாதாரப்பணிகள் பிரிவின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, மாநகராட்சி பொறியாளா் கணேசன், சுகாதார அலுவலா் அருள்நம்பி ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள், மருத்துவக் குழுவினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.