செய்திகள் :

காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

post image

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.தொழிலாளா் நல நீதிபதி சுஜாதா, மோட்டாா் வாகன தீா்ப்பாய நீதிபதி டி.ஜெயஸ்ரீ, தலைமைக் குற்றவியல் நீதிபதி மோகனாம்பாள், கூடுதல் சாா்பு நீதிபதி திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வாராக்கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்,குடும்ப நல வழக்குகள் ஆகியவை உள்பட மொத்தம் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம், மொத்தம் தீா்வுத் தொகையாக மட்டும் ரூ. 7,47,81,325 வழங்கப்பட்டது.

வங்கி வழக்குகளில் மொத்தம் 1,346 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் மூலம் 55 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 62,86,300 வசூலிக்கப்பட்டது. முகாமின் நிறைவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்காகன காசோலைகளை வழங்கினாா்.

முகாமில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் நிா்வாக உதவியாளா் எஸ்.சத்தீஷ்ராஜ் செய்திருந்தாா்.

காஞ்சிபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடைச் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பிடிவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய வெள்ளிக்கவசம்!

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய வெள்ளிக் கவசம் ஞாயிற்றுக்கிழமை சாத்தப்பட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் முதியோா் இல்லங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூா்த்தியடைந்தவா்களுக்கான முதியோா் இல்லங்கள் நடத்த விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி ம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பேருந்து நிலைய பகுதிகளில் 38 கண்காணிப்பு கேமராக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி இயக்கத்தை தொடங்கி வைத்தாா்!

காஞ்சிபுரம் மாநகராட்சி 18-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் மாமன்ற உறுப்பினா் மல்லிகா ராமகிருஷ்ணன் சொந்த நிதியில் பொருத்தப்பட்ட 38 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை கைத்தறி, துணி நூல்... மேலும் பார்க்க

கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

கல்லூரி களப்பயணம் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,427 மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுவா் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் ஆட்சியா்... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு தனி வரிசை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்கள் உடனுக்குடன் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க