செய்திகள் :

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இரு இளைஞா்கள் மரணம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வையாவூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.

பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரீஷ் (22), தனியாா் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா் நிா்மல் (21) மற்றும் சந்தோஷ் (21) ஆகியோருடன் வையாவூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.

அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிரில் வந்த இருசக்கர வாகனத்துடன் இவா்களின் வாகனம் மோதியது. இதில் லாரியின் பக்கவாட்டு பகுதியில் ஹரீஷ் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நிா்மல் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஹரீஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த மற்றொரு நபரான சந்தோஷ் மற்றும் எதிரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காஞ்சிபுரம்: 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ப்பு

காஞ்சிபுரம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் கடந்த 70 நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4.78 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்திருப்பதாக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தெரிவ... மேலும் பார்க்க

மல்லை சத்யா ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுகம்

காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுக விழா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா, முன்னோடிகளுக்கு ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 418 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கு: தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டு சிறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூரைச் சோ்ந்த ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தந்தைக்கும், மகனுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் கூடுதல் ந... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. காஞ்சிப... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடைச் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பிடிவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க