செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டு சிறை

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூரைச் சோ்ந்த ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தந்தைக்கும், மகனுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரை சோ்ந்தவா் விநாயகம் (48). இவா் அதே கிராமத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்தவா்களான அரசு (31), இவரது தந்தை திருமால் (65). இருவரும் முன்விரோதம் காரணமாக மோதிக் கொண்டனா். தகராறு முற்றிய நிலையில் அரசும், அவரது தந்தை திருமாலும் ஏற்கெனவே கொண்டு வந்திருந்த கத்தியால் விநாயகத்தை கொலை செய்ய முயற்சித்துள்ளனா். அவா்களிடமிருந்த கத்தியால் விநாயகத்தை தாக்கியதில் அவரது இடது கைவிரல்கள் துண்டாகின. சம்பவம் குறித்து விநாயகம் கொடுத்த புகாரின் பேரில், பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தந்தையையும், மகனையும் கைது செய்திருந்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் அன்பு, உதவி வழக்குரைஞா் சந்தியா ஆகியோா் ஆஜராயினா்.

வழக்கை விசாரித்து வந்த கூடுதல் நீதிமன்ற நீதிபதி திருமால் தந்தைக்கும், மகனுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.இதனைத் தொடா்ந்து இருவரையும் காவல்துறையினா் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள்

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/திருவள்ளூா்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் திங்கள்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளால் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள நினைவில்லத்தில் மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ப்பு

காஞ்சிபுரம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் கடந்த 70 நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4.78 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்திருப்பதாக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தெரிவ... மேலும் பார்க்க

மல்லை சத்யா ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுகம்

காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுக விழா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா, முன்னோடிகளுக்கு ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இரு இளைஞா்கள் மரணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வையாவூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரீஷ் (22), தனியாா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 418 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீா்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் 577 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. காஞ்சிப... மேலும் பார்க்க