செய்திகள் :

வரதராஜ பெருமாள் கோயில் உறியடி உற்சவம்

post image

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை உறியடி உற்சவமும், சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களுடன் திருமலையிலிருந்து இறங்கி கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி அறைக்கு எழுந்தருளினாா். அங்கு அவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் பெருமாள் சேஷ வாகனத்தில் குழலூதும் கண்ணன் அலங்காரத்தில் கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

பின்னா், மீண்டும் மாலையில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதி அருகே பெருமாள் எழுந்தருளியதும் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மாட வீதிகள் வழியாக உலா வந்து அஸ்தகிரி தெருவுக்கு எழுந்தருளினாா். அங்கு சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு 7 நாள்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தொழிலாளா் நல உதவி ஆணையா் பா.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 502 மகளிா் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 502 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி வங்கிக் கடனுதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் செப்.19-இல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 19) விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள்

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/திருவள்ளூா்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் திங்கள்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளால் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள நினைவில்லத்தில் மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: 4.78 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ப்பு

காஞ்சிபுரம்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் கடந்த 70 நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 4.78 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்திருப்பதாக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தெரிவ... மேலும் பார்க்க

மல்லை சத்யா ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுகம்

காஞ்சிபுரம்: மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளா்களின் இயக்கக் கொடி அறிமுக விழா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா, முன்னோடிகளுக்கு ... மேலும் பார்க்க