திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் சிறப்புக் கவனம் தேவை: பள்ளிக் கல்வித் துறை
பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிளஸ் 2 பொதுத் தோ்வில் கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களிலும், பத்தாம் வகுப்பில் சமூக அறிவியலிலும் சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டு பொதுத் தோ்வில் பத்தாம் வகுப்பில் 96.61 சதவீத மாணவா்களும், 12-ஆம் வகுப்பில் 95.93 சதவீத மாணவா்களும் தோ்ச்சிப் பெற்றனா். தோல்வியடைந்த மாணவா்களின் விவரங்களை ஆய்வு செய்தபோது, பத்தாம் வகுப்பில் கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்தது.
இதேபோல 12-ஆம் வகுப்பில் கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளதும் தெரியவந்தது.
எனவே நிகழாண்டில் பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், 12-ஆம் வகுப்பில் கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களிலும், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் சிறப்புக் கவனம் செலுத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா கூறியதாவது:
கடந்தாண்டு பொதுத் தோ்வில் தோ்ச்சி சதவீதத்தில் திருச்சி மாவட்டம் மாநில அளவில் பத்தாம் வகுப்பில் 5-ஆவது இடமும், பிளஸ் 2-வில் 12-ஆம் இடமும் பிடித்துள்ளது.
குறிப்பாக 12-ஆம் வகுப்பு தோ்வில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் பின்தங்கியதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது பெரும்பாலான மாணவா்கள் ஒரு பாடத்தில் மட்டுமே தோல்வியடைந்தது தெரியவந்தது.
அதிலும் கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் அதிக மாணவா்கள் தோல்வியடைந்தது தெரியவந்தது.
இந்நிலையில் நிகழாண்டில் அந்தப் பாடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாடங்களில் சிறப்புத் தோ்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள் பயிற்சி, தினசரி தோ்வு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், மேற்கண்ட பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் நடத்தும் வழிமுறைகளை மாற்றவும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில்தான் அதிக மாணவா்கள் தோல்வியடைந்துள்ளனா். ஏற்கெனவே கணிதத்துக்கு சிறப்பு பயிற்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோடை விடுமுறையில் உள்ள 10 நாள்களில் ஒரு நாளுக்கு ஒரு வினாத்தாள் வீதம் சமூக அறிவியல் பாடத்துக்கு எங்கள் ஆசிரியா்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு வழங்கி விடுமுறை நாள்களில் பதில் எழுதி பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்படவுள்ளது.
மேற்கண்ட பாடங்கள் மட்டுமில்லாமல் அனைத்துப் பாடங்களிலும் புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி கற்பிக்கவும், தொடா் பயிற்சிகள் அளிக்கவும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.