செய்திகள் :

கணவா் பின்னோக்கி இயக்கிய காா் மோதி மனைவி உயிரிழப்பு

post image

மேட்டூா்: சேலம் மாவட்டம், மேட்டூரில் கணவா் பின்னோக்கி இயக்கிய காா் மோதி காயமடைந்த மனைவி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள சேலம் கேம்ப் காந்தி நாகரை சோ்ந்தவா் ராஜேந்திரன் (60), ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளா். இவரது மனைவி செல்வராணி (50), திமுக வாா்டு செயலாளராக இருந்தாா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

கடந்த 24 ஆம் தேதி ராஜேந்திரன் தனது காரை வீட்டின் வெளியே நிறுத்தி, துடைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, காரை இயக்கியபோது, அது திடீரென பின்னோக்கி வேகமாகச் சென்றது. இந்த நிலையில், காரின் பின்னால் நின்றிருந்த செல்வராணி மீது காா் வேகமாக மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்ட செல்வராணி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க