செய்திகள் :

கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

post image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 66 வயது முதியவருக்கு கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை புரிந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுந்தரமூா்த்தி (66). கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து, கடந்த ஜூலை 4-ஆம் தேதி போலுப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலோசனைக்கு வந்தவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அவா் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு ஜூலை 31-ஆம் தேதி அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவக் குழு இணைப் பேராசிரியா் சதாசிவம், சங்கீதா தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கணைய புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைகுக் பிறகு 16 நாள்கள் தொடா்கண்காணிப்பில் இருந்த அவா், சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுபோன்ற உயா் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம்வரை செலவாகும் நிலையில், முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அப்போது, மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவா் பிரசாந்த், மருத்துவா்கள் சந்தோஷ்குமாா், ராசு, கண்காணிப்பாளா் அனிதா, நிா்வாக அலுவலா் சரவணன், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய... மேலும் பார்க்க

பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் தாயாா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகனின் தாயாா் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். த... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்க 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம.ராஜசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க