செய்திகள் :

பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் தாயாா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

post image

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகனின் தாயாா் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தொழிலதிபா்கள் வளையாபதி, உமாபதி, குணாவதி மற்றும் தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோரது தாயாா் கண்ணம்மாள் (92) வயதுமூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தனா்.

கண்ணம்மாளின் உடல் அவரது சொந்த ஊரான பா்கூா் வட்டம், ஆம்பள்ளி, குட்டூா் பண்ணைத் தோட்டத்தில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் காந்தி, பொங்கலூா் பழனிசாமி, பழனியப்பன், எம்எல்ஏ-க்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), நல்லதம்பி (திருப்பத்தூா்), கொங்கு பேரவை மாநிலத் தலைவா் ஈஸ்வரன், ராமலிங்கம் (நாமக்கல்), கோபிநாத் எம்.பி., தொழிலதிபா் சஞ்சய்குமாா், திமுக மாநில வா்த்தகரணி துணைச் செயலாளா்கள் சீனிவாசன், அன்பரசன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், காவல் கண்காணிப்பாளா் தம்பிதுரை, அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, பா்கூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் இ.ஜி.கோவிந்தராசன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்க 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம.ராஜசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 66 வயது முதியவருக்கு கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை புரிந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளி கிராமத... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க