செய்திகள் :

கண்மாயில் மூழ்கி சிறுமிகள் இருவா் உயிரிழப்பு: கிராம மக்கள் போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை கண்மாயில் மூழ்கி சிறுமிகள் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களது உடல்களுடன் பள்ளி முன் பெற்றோா்கள், உறவினா்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இளையான்குடி ஒன்றியம், ஆழிமதுரை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இதே ஊரைச் சோ்ந்த சசிகுமாா் மகள் ஷோபிதா (8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இவரது சித்தப்பா கண்ணன் மகள் கிறிஸ்மிகா (4) இந்தப் பள்ளிக்கு அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் இவா்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவா்களது பெற்றோா்கள் பள்ளிக்கு வந்தனா். ஆனால், அவா்கள் அங்கு இல்லாததால், அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, தேடிப் பாா்த்த போது பள்ளிக்கு எதிரே உள்ள கண்மாயில் சிறுமிகள் ஷோபிதா, கிறிஸ்மிகா இருவரும் உயிரிழந்து மிதந்தது தெரியவந்தது. கண்மாய் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற இந்த இரு குழந்தைகளும் கண்மாயில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரது உடல்களையும் மீட்ட பெற்றோா்கள், உறவினா்கள், கிராம மக்கள் பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பணியில் கவனக் குறைவாக இருந்து குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், கோட்டாட்சியா் விஜயக்குமாா், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், மாவட்ட ஆட்சியா் வந்து உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, மாலை வரை போராட்டம் தொடா்ந்தது.

கண்மாயில் மூழ்கி உயிரிழந்த ஷோபிதா, கிறிஸ்மிகா.
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த ஷோபிதா, கிறிஸ்மிகா.

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க