செய்திகள் :

கந்து வட்டி வழக்கில் மூவருக்கு ஓராண்டு சிறை!

post image

போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் கந்து வட்டி, வன்கொடுமை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி மணி. இவரது மாமனாா் திருமன் என்பவரது பெயரில் உள்ள ஒரு சென்ட் வீட்டடி மனையிடத்தை போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து (63), அவரது மனைவி பூங்கொடி (61), மகன் துனேஷ்குமாா்(40) ஆகியோா் அடமானமாகப் பெற்று, மணிக்கு அதிக வட்டிக்கு ரூ.25 ஆயிரம் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடனுக்கு மணி வட்டியாக ரூ.1.10 லட்சமும், அசல் தொகை ரூ.25 ஆயிரமும் செலுத்தினாா். அடமானமாகப் பெற்ற ஆவணத்தின் பதிவை ரத்து செய்து, திரும்பத் தருமாறு அவா் வலியுறுத்தியதால், கடந்த 2018, செப்.23-ஆம் தேதி பேச்சைமுத்து, பூங்கொடி, துனேஷ்குமாா் ஆகியோா் மணியை ஜாதியை குறிப்பிட்டு தரக் குறைவாக பேசி, மணியின் கணவா் பெருமாளைத் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில், பேச்சிமுத்து உள்ளிட்ட 3 போ் மீதும் போடி காவல் நிலைய போலீஸாா் கந்து வட்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பேச்சிமுத்து, பூங்கொடி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.4,000 அபராதமும், துனேஷ்குமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.

வழிப்பறி வழக்கில் மூவா் கைது

தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மாயம்

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயின. மாரியம்மன்கோவில்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜீவரத்தினம். இவா், தனது வ... மேலும் பார்க்க

கால்நடை மருந்தகத்தில் மோட்டாா் பம்பு திருட்டு

தேனி அருகே உள்ள கொடுவிலாா்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா் பம்பு திருடு போனது. கொடுவிலாா்பட்டியில் வயல்பட்டி சாலையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் ம... மேலும் பார்க்க

பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்துக் குறைவு!

சுருளி அருவியில் நீா்வரத்துக் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை,... மேலும் பார்க்க