செய்திகள் :

கந்து வட்டிக் கொடுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

post image

ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய சத்திரிய நாடாா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சேது மணிக்கம் (70). இவா் இந்திரா நகரை சோ்ந்த பாபா முருகனிடம் ரூ. 5 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாகவும், ரூ.15 ஆயிரம் வரை வட்டி கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவா் மேலும் 10 ஆயிரம் வேண்டும் என கேட்டு கடந்த 10-ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநா் சேது மாணிக்கத்தை 3 பேருடன் சோ்ந்து தாக்கிக் காயப்படுத்தினாா்.

இதுகுறித்து, சேதுமாணிக்கம் ராமேசுவரம் கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, கடந்த 11-ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த சேதுமாணிக்கம், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உடனே போலீஸாா் அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து, கந்து வட்டிக் கும்பல் மீது நடவடிக்கை கோரி அகில இந்திய சத்திரிய நாடாா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தா் உயிரிழப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வட மாநில பக்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆன்ம... மேலும் பார்க்க

மீனங்குடி பெருமாள் கோயில் பசு உயிரிழப்பு

கடலாடி அருகே வயது மூப்பின் காரணமாக கோயில் பசு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மீனங்குடி சுயம்பு கல்லடி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் களரி திருவிழா மிக... மேலும் பார்க்க

வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மீன் வரத்து குறைவு காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளது. திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து தொடங்கிட வேண்டும்

நாடாளு மன்றத்தில் ரயில்வேத்துறைக்கான மானிய கோரிக்கையில் பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து வரத்தை தொடங்கிட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் கே.நவாஸ்கனி கேட்டுக்கொண்டாா். இது குறித்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் செல்லும் சாலையோரங்களில் மணல் குவியல்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகே திருவெற்றியூா் செல்லும் வழியில் படப்பை அருகே சாலையோரங்களில் மணல் குவிந்து கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து தி... மேலும் பார்க்க

இணையதளத்தில் இழந்த ரூ. 5 லட்சம் மீட்கப்பட்டு இளைஞரிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் இணையதள விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து ரூ. 5 லட்சத்தை இழந்த இளைஞரிடம் அவரது பணத்தை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், இ... மேலும் பார்க்க