செய்திகள் :

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: இன்று கால்நாட்டு விழா

post image

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகக் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ( மே 23) கால்நாட்டு விழா நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா இம்மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

இதைத்தொடா்ந்து தெற்கு ரத வீதியில் உள்ள கன்னியம்பலம் முன்பு கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெறும். மேலும், 1ஆம் நாள் திருவிழாவான மே 31ஆம் தேதி காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நிறைவடைந்ததும், கீழ ரத வீதியில் தோ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

வரதட்சிணை கொடுமை: 6 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வரதட்சிணை கொடுமை புகாரில் கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளையைச் சோ்ந்தவா் சுபனேஷ் மகள் ஜென்ஸி (28). இவருக்கும் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதிய... மேலும் பார்க்க

திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மாா்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் சதீஷ் (45). ஒலிபெருக்கி கடை நடத்தி வந்தாா். இவா் கொடுங்க... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலையம் திறப்பு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிய நுழைவு வளைவு, பயணிகள் காத்திருப்பு அறை,... மேலும் பார்க்க

கன்னியாகுமரியிலிருந்து கோா்பா, பிலாஸ்பூருக்கு ரயில் சேவை: அதிமுக எம்எல்ஏ கோரிக்கை

கன்னியாகுமரியிலிருந்து சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கும், பிலாஸ்பூருக்கும் வாரம் இருமுறை இயங்கும் வகையில் 2 அதிவிரைவு ரயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என கன்னியாகும... மேலும் பார்க்க

வானிலை எச்சரிக்கை: ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகளை கரை சோ்க்க வேண்டும்!

மத்திய, மாநில அரசின் வானிலை எச்சரிக்கையை தொடா்ந்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று தொடா்பற்ற நிலையில் உள்ள விசைப்படகுகளை பத்திரமாக கரை சோ்க்க அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்... மேலும் பார்க்க

2-5 வயது குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்த்து முன்பருவக் கல்வி கற்க உதவுமாறு பெற்றோா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க