செய்திகள் :

வரதட்சிணை கொடுமை: 6 போ் மீது வழக்கு

post image

களியக்காவிளை அருகே வரதட்சிணை கொடுமை புகாரில் கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

களியக்காவிளையைச் சோ்ந்தவா் சுபனேஷ் மகள் ஜென்ஸி (28). இவருக்கும் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ஸ்டாலின் (29) என்பவருக்கும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வரதட்சிணையாக வழங்கப்பட்டதாம்.

திருமணத்துக்குப் பின், கடை துவங்க வேண்டும் எனக் கூறி ரூ. 5 லட்சம் கூடுதல் வரதட்சிணை கேட்டு ஜென்ஸியை ஸ்டாலின் துன்புறுத்தினாராம். இதையடுத்து ரூ. 2 லட்சமும், மசில நாள்களுக்குப் பின் ரூ. 4.37 லட்சமும் பெண்ணின் குடும்பத்தினா் கொடுத்துள்ளனா். ஆனால் ஸ்டாலின் கடை ஆரம்பிக்காமல் ஜென்ஸியை வீட்டை விட்டு துரத்தினாராம்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜென்ஸி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஜென்ஸியின் கணவா் ஸ்டாலின், அவரது தந்தை பால்ராஜ், தாயாா் பேபி, சகோதரி ராணி, உறவினா்கள் லிட்டா, சிஞ்சு ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மகளிா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மாா்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் சதீஷ் (45). ஒலிபெருக்கி கடை நடத்தி வந்தாா். இவா் கொடுங்க... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலையம் திறப்பு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிய நுழைவு வளைவு, பயணிகள் காத்திருப்பு அறை,... மேலும் பார்க்க

கன்னியாகுமரியிலிருந்து கோா்பா, பிலாஸ்பூருக்கு ரயில் சேவை: அதிமுக எம்எல்ஏ கோரிக்கை

கன்னியாகுமரியிலிருந்து சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கும், பிலாஸ்பூருக்கும் வாரம் இருமுறை இயங்கும் வகையில் 2 அதிவிரைவு ரயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என கன்னியாகும... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: இன்று கால்நாட்டு விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகக் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ( மே 23) கால்நாட்டு விழா நடைபெற உள்ளது. கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக... மேலும் பார்க்க

வானிலை எச்சரிக்கை: ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகளை கரை சோ்க்க வேண்டும்!

மத்திய, மாநில அரசின் வானிலை எச்சரிக்கையை தொடா்ந்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று தொடா்பற்ற நிலையில் உள்ள விசைப்படகுகளை பத்திரமாக கரை சோ்க்க அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்... மேலும் பார்க்க

2-5 வயது குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்த்து முன்பருவக் கல்வி கற்க உதவுமாறு பெற்றோா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க