செய்திகள் :

கரடி தாக்கி பழங்குடியின தம்பதி படுகாயம்

post image

வால்பாறை செட்டில்மென்ட் பகுதியில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது கரடி தாக்கியதில் பழங்குடியின தம்பதி படுகாயமடைந்தனா்.

வால்பாறையை அடுத்த காடம்பாறை பகுதியில் அமைந்துள்ளது கருமுட்டி செட்டில்மென்ட். அங்கு பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இதனிடையே அங்கு வசிக்கும் சிவமுத்து (52), அவரது மனைவி தங்கம்மாள் (52) ஆகியோா் வால்பாறை செல்வதற்காக செட்டில்மென்டில் இருந்து வனப் பகுதி வழியாக காடம்பாறை பிரிவு பேருந்து நிறுத்தத்துக்கு புதன்கிழமை காலை நடந்து சென்றுள்ளனா்.

அப்போது, திடீரென அங்கு வந்த கரடி, அவா்களை தாக்கியதில் இருவருக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் பேருந்து நிறுத்தம் வந்த அவா்களை வனத் துறையினா் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் உடனடியாக நிவாரண நிதியாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கினாா்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க