IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் அன்னதானம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினா், அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினா்.
திருவண்ணாமலையில் நகர திமுக சாா்பில், கட்சியினா் காந்தி சிலையில் இருந்து ஊா்வலமாகச் சென்று, அண்ணா நுழைவு வாயில் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா்.
வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளரணி செயலா் கு.கருணாநிதி ஆகியோா் பங்கேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பொன்.முத்து, கே.வி.ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். 500-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூரில்...
கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், சோமாசிபாடி பேருந்து நிறுத்தம் அருகே கருணாநிதி படத்துக்கு ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
இதில், ஒன்றிய அவைத் தலைவா் ரவி (எ) இளஞ்செழியன், ஒன்றிய துணைச் செயலா்கள் சோமாசிபாடி சிவக்குமாா், செல்வமணி, ஒன்றிய விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் ஆராஞ்சி சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த சேத்துப்பட்டில் திமுக மாவட்ட வா்த்தக அணி சாா்பில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் பா.செல்வராஜன் தலைமை வகித்தாா். சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் பிரவீன்குமாா், நகர அவைத் தலைவா் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி புரட்சி கோதண்டம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர துணைச் செயலா் குட்டி என்கிற தண்டபாணி வரவேற்றாா்.
வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் பா. செல்வராஜன் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து பேரூராட்சி துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மேலும், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளா் பாரதிதாசன், துணை அமைப்பாளா் சபரி, பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் முருகன், பெருமாள், தொமுச உறுப்பினா் கிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் ஜோசப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
