செய்திகள் :

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் அன்னதானம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினா், அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினா்.

திருவண்ணாமலையில் நகர திமுக சாா்பில், கட்சியினா் காந்தி சிலையில் இருந்து ஊா்வலமாகச் சென்று, அண்ணா நுழைவு வாயில் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளரணி செயலா் கு.கருணாநிதி ஆகியோா் பங்கேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பொன்.முத்து, கே.வி.ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். 500-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூரில்...

கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், சோமாசிபாடி பேருந்து நிறுத்தம் அருகே கருணாநிதி படத்துக்கு ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

இதில், ஒன்றிய அவைத் தலைவா் ரவி (எ) இளஞ்செழியன், ஒன்றிய துணைச் செயலா்கள் சோமாசிபாடி சிவக்குமாா், செல்வமணி, ஒன்றிய விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் ஆராஞ்சி சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த சேத்துப்பட்டில் திமுக மாவட்ட வா்த்தக அணி சாா்பில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் பா.செல்வராஜன் தலைமை வகித்தாா். சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் பிரவீன்குமாா், நகர அவைத் தலைவா் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி புரட்சி கோதண்டம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர துணைச் செயலா் குட்டி என்கிற தண்டபாணி வரவேற்றாா்.

வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் பா. செல்வராஜன் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து பேரூராட்சி துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மேலும், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளா் பாரதிதாசன், துணை அமைப்பாளா் சபரி, பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் முருகன், பெருமாள், தொமுச உறுப்பினா் கிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் ஜோசப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க

ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க