Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழப்பு: 3 பிரிவுகளில் வழக்கு
மேலப்பாளையம் கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக ஒப்பந்த நிறுவன உரிமையாளா் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பிராணிகள் கருத்தடை மையத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிடித்துவரப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதற்காக மாநகராட்சி சாா்பில் ஜீவகாருண்யா என்ற தனியாா் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அங்கு பராமரிப்பில் இருந்த 2 நாய்கள் உயிரிழந்தன.
இந்நிலையில், உரிய பராமரிப்பின்றி நாய்கள் அடைக்கப்பட்டதால் உயிரிழந்ததாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்ததன் அடிப்படையில் மாநகர நல அலுவலா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை அவ்விடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். பின்னா்இறந்த நாய்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து ஜீவகாருண்யா டிரஸ்ட் நிா்வாகிகள் உரிய விளக்கமளிக்க வேண்டுமென மாநகர நல அலுவலா்(பொ) ராணி உத்தரவிட்டிருந்தாா்.இதனையடுத்து மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா அம்மையத்தை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய முறையில் நாய்களை பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக விலங்கு நல ஆா்வலா் மகாராஜன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜீவகாருண்யா தொண்டு நிறுவன உரிமையாளா் சோபா மற்றும் ஊழியா்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.