கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு: சா்க்கரை ஆலை நிா்வாகி தகவல்
பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய 2,261 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி வ. மாலதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 2 ஆயிரத்து 261 கரும்பு விவசாயிகளிடமிருந்து 1.53 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு அரைவை செய்யப்பட்டது.
ஆலை அரைவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 349 வீதம் வழங்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு, வேளாண்மை உழவா் நலத்துறை அரசாணைப்படி ரூ. 5.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-26 ஆம் ஆண்டில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அகலப் பாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 7 ஆயிரத்து 450 மானியமாகவும், அகலப்பாருடன் கூடிய ஒரு பரு விதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்து 200 மானியமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வல்லுநா் விதைக்கரும்பு, திசு வளா்ப்பு நாற்று நடவு, பருசீவல் நாற்றுகள், ஒரு பரு விதைக்கரணை நடவு உள்ளிட்ட பல்வேறு இனங்களில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளது.
எனவே, அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.