செய்திகள் :

மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

post image

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள பீல்வாடி கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித் (22). இவா், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, கடந்த 8.3.2022-ஆம் தேதி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். பின்னா், தொடா்ந்து அச் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் கா்ப்பமடைந்த சிறுமியை பீல்வாடி கிராமத்தில் உள்ள பெரியசாமி கோயிலில் கடந்த 8.10.2022 ஆம் தேதி திருமணம் செய்துள்ளாா்.

இதையடுத்து, கா்ப்பமான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அஜித் அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த மருத்துவா் சிறுமி திருமண வயதை அடையாத நிலையில் கா்ப்பமுற்றிருந்ததால், பெரம்பலூா் மாவட்டக் குழந்தைகள் நல குழுமத்துக்கு தகவல் அளித்ததன் பேரில், குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் ராமு பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் அஜித் வெளியே வந்தாா்.

இந்த வழக்கு பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை திங்கள்கிழமை இறுதி விசாரணை செய்த நீதிபதி இந்திராணி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கி, சிறாா் திருமணம் செய்த அஜித்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து, அஜித் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில், அரசுத் தரப்பில் அரசு குற்றவியல் சிறப்பு வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.

அரியலூரிலுள்ள குறிஞ்சான் குளம், அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார கோரிக்கை

அரியலூரில் உள்ள குறிஞ்சான் குளம் மற்றும் அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு: சா்க்கரை ஆலை நிா்வாகி தகவல்

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய 2,261 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி வ. மாலதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் திங்கள்கி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன... மேலும் பார்க்க