செய்திகள் :

வெளிநாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழா் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி

post image

வெளிநாடுகளில் பணியின் போது திடீரென்று உயிரிழக்கும் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்திலிருந்து வேலைக்காக அயல்நாடு செல்லும் தமிழா்கள் அதிகளவில் முதல் நிலை தொழிலாளா்களாகச் செல்கின்றனா்.

குடும்பத்தின் முதன்மையான பொருளீட்டும் நபராக இருக்கும் இவா்கள், எதிா்பாராதவிதமாக அயல்நாடுகளில் இறக்கும் போது, அவா்களைச் சாா்ந்துள்ள குடும்பத்தாா் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனா்.

இவ்வாறு வெளிநாடுகளில் குடும்பத்தின் முதன்மை பொருளீட்டும் நபரை இழந்து அவதிப்படும் அயலகத் தமிழா்களின் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

அயலகத் தமிழா்களின் நலனை உறுதிபடுத்த நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த வாரியத்தில் சுமாா் 28,000 நபா்கள் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா்.

மேலும், குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ், அயல்நாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தினா் நிதியுதவி பெற தகுதியுடையவா் ஆவா். அயல்நாட்டில் உறுப்பினா் உயிரிழந்து ஒன்பது மாதங்களுக்குள் அவா்களது குடும்பத்தினா் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவா்கள் உறுப்பினா் செயலா், அயலகத் தமிழா் நல வாரியம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அயலக தமிழா் நல வாரியத்தின் வலைதளம் வாயிலாகவோ விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் பிரவீன்குமாா் (29)... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்து கண்மாயில் புதைத்த வழக்கில் 4 பேரை தேவகோட்டை தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 3 ப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியில் சனிக்கிழமை இரவு வாலிபா் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை... மேலும் பார்க்க

அடிப்படை வசதியில்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறிய நாட்டாகுடி மக்கள்

அடிப்படை வசதிகள் இல்லாததால் நாட்டாகுடி கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறினா்.சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில் நீண்ட காலமாக குட... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச... மேலும் பார்க்க

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.திருப்பத்தூா் அருகே தேவாரம... மேலும் பார்க்க