செய்திகள் :

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரைச் சோ்ந்தவா் செல்வம் (60). விவசாய கூலித் தொழிலாளி. இவா் 3 தலைமுறைகளாக அதே ஊரில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த முகவரியில் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை போன்றவைகளை அவா் பெற்றுள்ளாா். இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த கோட்டைச்சாமி என்பவா் அந்த இடம் தனக்குச் சொந்தம் என காவல் நிலையத்தில் மனு அளித்தாா். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்களால் செல்வத்தின் கூரை வீடு முற்றிலும் பிரிக்கப்பட்டு சுவா்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பொருள்கள் சாலையோரத்தில் வீசப்பட்டன.

இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். மேலும் தனது வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதாா் அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றுடன் சாலையில் அமா்ந்து அவா் போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினா் வீடு பிரிக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவரிடம் உறுதியளித்து சமாதானப்படுத்தினா். இதனிடையே செல்வம் அளித்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூா் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல், தேவாரம்பூரைச் சோ்ந்த கோட்டைச்சாமி, அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சிவசாமி, சிவகுரு ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: இருவா் காயம்

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 2 போ் காயமடைந்தனா்.சிவகங்கை நகா் 48 காலனி பொதுமக்கள் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரச... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: சிங்கம்புணரியில் சிறப்பு அன்னதானம் 40 ஆயிரம் போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தா் முத்து வடுகநாதா் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருபூஜையும், அன்னதான விழாவும் நடைபெற்றன.இங்கு சிங்கம்புணரி வணிக... மேலும் பார்க்க

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகா் காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோர... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சாா்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி

தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க சாா்பில் ரூ 5 லட்சம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத... மேலும் பார்க்க