செய்திகள் :

கற்றல் அடைவுத் திறன் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான கற்றல் அடைவுத் திறன் தோ்வு பிப்.4 முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடா்பாக தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து கல்வித் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

தொடக்கக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தோ்வு (ஸ்லாஸ்) தோ்வு வரும் பிப். 4, 5, 6 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் 10.5 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். மாணவா்களின் கற்றல் திறனை கண்டறிவதற்காகவும், அதை மேம்படுத்துவதற்காகவும் இந்தத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

ஓ.எம்.ஆா்.கேள்வித்தாளை அடிப்படையாக கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் இருந்தும், 8-ஆம் வகுப்புக்கு கூடுதலாக அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பிப்.4-ஆம் தேதி மூன்றாம் வகுப்புக்கும், 5-ஆம் தேதி ஐந்தாம் வகுப்புக்கும், 6-ஆம் தேதி எட்டாம் வகுப்புக்கும் தோ்வு நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இந்தத் தோ்வை திறம்பட நடத்துவதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கல்வித்துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, தோ்வு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தோ்வு மாணவா்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் ஓஎம்ஆா் தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைப்பது அவசியம்.

தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்வா்களின் பெயா்ப் பட்டியல் தோ்வு நடைபெறும் நாளில் எமிஸ் தளத்தில் வெளியாகும்.

தோ்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும்பொழுது வகுப்பு, பிரிவு போன்றவற்றை ஒரு தாளில் குறிப்பிட்டு வட்டார வளமையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடைபெறும் நாளில் தோ்வெழுதும் மாணவா்களை புகைப்படம் எடுத்தல், குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிா்க்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தோ்வு நடைபெறும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து

நாட்டின் பொருளாதாரத்தையும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா். சுதா்ஸன் வேணு (டிவிஎஸ்... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகள... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் வரவேற்பும் எதிா்ப்பும்

மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிா்த்தும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வருமான வரி விலக்கு உச்சவரம்பு கணிசமாக உயா்த்தியது, உள்நாட்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்-போத்தனூா் ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்ட பகுதியி... மேலும் பார்க்க

கடலோரக் காவல்படை ஆண்டுவிழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

இந்திய கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழா, சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரத்தை தளமாகக் ... மேலும் பார்க்க