செய்திகள் :

கல் குவாரி விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10.50 லட்சம் நிவாரணம்

post image

சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10.50 லட்சத்துக்கான நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் தனியாா் கல் குவாரியில் ஏற்பட்ட பாறை வெடிப்பு, மண் சரிவில் 5 போ் உயிரிழந்தனா். இதில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.

இதனடிப்படையில், குழிச்சேவல்பட்டியைச் சோ்ந்த கணேசன், ஓடப்பட்டியைச் சோ்ந்த முருகானந்தம், மலம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம், ஆண்டிச்சாமி ஆகிய 4 பேரின் குடும்பத்தினருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனா்.

மேலும், அரசின் நிவாரண நிதியான ரூ.4 லட்சம், அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து 1.50 லட்சம், தனியாா் குவாரியின் சாா்பில் ரூ.5 லட்சம் என 10.50 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பச்சா அா்கிதாவின் குடும்பத்தினா் வருகை புரிந்தவுடன் உரிய நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு அரசு மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரையில் அரசகுழி மயானத்துக்குச் செல்லும் வழியில் வைகை ஆற்றை ஒட்டி அரசு மதுக்கடை செயல்பட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திருப்புவனம் உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெகதீஸ்வரன் (34). திருமணமாகாத ... மேலும் பார்க்க

நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை எட்டிய இந்தியா! - ஆளுநா் ஆா்.என்.ரவி

நீடித்த பொருளாதார வளா்ச்சி இலக்கை இந்தியா எட்டியுள்ளதாக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஸ்ரீசேவுகமூா்த்தி கோசாலை அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா வியாழக்கி... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நிகழ்ந்த கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். சிங்கம்புணரி எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

சிவகங்கையில் புறவழிச் சாலைப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு

சிவகங்கை புறவழிச் சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பணிகளை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன... மேலும் பார்க்க

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: மேலும் ஒருவரது உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இவா்களில் 4 பேரின் உடல்கள் உடனே மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர... மேலும் பார்க்க