செய்திகள் :

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லா நினைவாக, தமிழ்நாட்டைச் சோ்ந்த, துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு ‘துணிவு, வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது‘ வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு, விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை 2025-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக அரசின் விருதுகளுக்கான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/- என்கிற இணையதள பக்கத்தில் 16.06.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மேற்படி இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு, விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் துணிச்சலான, வீர சாகச செயல் குறித்த புகைப்படங்கள், பத்திரிக்கை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் ( ஙஹழ்ன்ற்ட்ஹம் ஊா்ய்ற்) மற்றும் ஆங்கில ( யங்ழ்க்ஹய்ஹ ஊா்ய்ற்) மொழிகளில் தனித்தனியாக 3 தொகுப்பு, (கையேடு) ஆா்ா்ந்ப்ங்ற் தயாா் செய்து 20.06.2025 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், ஆ-பிளாக், 4-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு - 603 111 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு

மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றா... மேலும் பார்க்க

அனகாபுத்தூா் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகள் இடித்து அகற்றம்

அனகாபுத்தூரில் அடையாறு கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூா் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகா்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ஜி.சிவசங்கா் கலந்துகொண்டு கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தாா். செவிலியா் கண... மேலும் பார்க்க

120 மாணவா்களுக்கு பணியானை அளிப்பு

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஐடிஐ கல்வி நிறுவனத்தில் 120 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் ஜி... மேலும் பார்க்க

கோயில் தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் கோயில் தேரோட்டத்தின்போது, தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயம் அடைந்தனா். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவவனையில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஆட்சியா் ச.அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் வாா்டு, டயாலசஸிஸ் பிரிவுகளை பாா்வையிட்டாா். அப்போது மருத்துவ... மேலும் பார்க்க