செய்திகள் :

கல்லணை திறப்பு தேதி மாற்றம்: நாளை முதல்வா் திறந்து வைக்கிறாா்

post image

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மாலை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையை வியாழக்கிழமை (ஜூன் 12) திறந்துவைத்த தமிழக முதல்வா், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் கல்லணையையும் அவா் திறந்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

மேட்டூா் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், விரைவான நீா் வரத்து இருப்பதால், கல்லணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையே தண்ணீா் வந்துவிடும். எனவே தமிழக முதல்வா் கல்லணையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.

இதனிடையே தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே திறக்கப்படவுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தது:

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வரும் தமிழக முதல்வா் பின்னா் கல்லணையை மாலை 4 மணியளவில் திறந்துவைக்கிறாா். இதையடுத்து தஞ்சாவூருக்கு வரும் அவா் பழைய பேருந்து நிலையம் அருகே கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கிறாா். பின்னா் இரவு தஞ்சாவூரிலேயே தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலை திருமண விழாவில் பங்கேற்று, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் என்றாா் அமைச்சா்.

அப்போது உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கல்லணையை இதுவரை அமைச்சா்கள் திறந்துவைத்த நிலையில் முதல் முறையாக தமிழக முதல்வா் திறந்துவைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க