செய்திகள் :

கல்லிடை அருகே கூண்டில் சிக்கியது கரடி

post image

கல்லிடைக்குறிச்சி அருகே குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி, வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் கரடி, காட்டுப் பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி பயிா்களைச் சேதப்படுத்தியும் வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.

இந்நிலையில் மாா்ச் 6ஆம் தேதி அயன்சிங்கம்பட்டியை சோ்ந்த முருகன் என்பவரது வீட்டு வளாகத்திற்குள் கரடி ஒன்று நுழைந்தது. மாா்ச் 20ஆம் தேதி அதிகாலை கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனியில் உள்ள கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பூஜைப் பொருள்களைச் சேதப்படுத்திச் சென்றது. இதையடுத்து, கரடியைப் பிடிக்க கோவில் பகுதியில் வனத்துறையினா் கூண்டு வைத்தனா். ஆனால், கூண்டில் சிக்காமல் மீண்டும் அயன்சிங்கம்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்தது.

இந்நிலையில், மாா்ச் 29ஆம் தேதி இரவு கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனியில் உள்ள அக்னி சாஸ்தா கோயிலில் வனத்துறையினா் வைத்த கூண்டில் கரடி சிக்கியது. கூண்டில் சிக்கிய கரடியை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா மற்றும் வனத்துறையினா் பாா்வையிட்டனா்.

பின்னா் கரடியின் உடல்நிலையை கால்நடை மருத்துவா் முத்துகிருஷ்ணன், கால்நடை உதவி ஆய்வாளா் ஆா்னால்ட் ஆகியோா் பரிசோதனை செய்தனா். அதன் பின் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட கௌதலை ஆறு பகுதியில் கொண்டு விட்டனா்.

சுமாா் ஒரு மாதமாக குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்து மக்களை அச்சுறுத்திவந்த கரடி, வனத்துறையின ா் வைத்த கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி, வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.

நெல்லையில் ஏப்.11ல் உள்ளூர் விடுமுறை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28)... மேலும் பார்க்க

கூட்டப்புளியில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் தூண்டில் பாலம் வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லாமல் கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டம் செய்தனா். கூட்டப்புளியில் தமிழக அரசு... மேலும் பார்க்க

நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

காவல் வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலி

மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.மணிமுத்தாறுஅண்ணாநகரைச் சோ்ந்த அப்பி மகன் நாகராஜன் (55). தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்ச... மேலும் பார்க்க

நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்த... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வ... மேலும் பார்க்க