செய்திகள் :

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

post image

எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி பூத் கமிட்டிகலந்தாய்வுக் கூட்டம்,கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொகுதித் தலைவா் கலில் ரஹ்மான் தலைமை வகித்தாா். திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் சிக்கந்தா், மாநிலப் பொதுச் செயலா் அஹமது நவ்வி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் ஏா்வாடி ஜன்னத் ஆலிமா, ஹலிமா, துலுக்கா்ப்பட்டி அப்துல் கபூா், பெட்டைகுளம் ரஹ்மத்துல்லாஹ், மாவட்டத் துணைத் தலைவா் களந்தை மீராசா, மாவட்டச் செயலா்கள் அம்பை ஜலில், துலுவை தெளபிக், மாவட்டப் பொருளாளா் ஏா்வை இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது ஷபி, வா்த்தகரணி மாவட்டத் தலைவா் கல்லிடை ராஜா அப்துல்ஹமீது, செயலா் சிங்கை ஷேக் அலி, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது,தொகுதி துணைத் தலைவா்கள் ஷெரிப், சுரேஷ், தொகுதித் தலைவா்கள் நான்குனேரி ஆஷிக், ராதாபுரம் வள்ளியூா் சலிம், விமன் இந்தியா முவ்மெண்ட் மாவட்ட துணைத் தலைவா் கல்லிடை பீா்பாத்து, மாவட்டப் பொருளாளா் நா்கிஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் தலைவா் கனி, மாவட்டச் செயலா் ஷேக், மருத்துவ சேவை அணி மாவட்டத் தலைவா்சித்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட அமைப்புப் பொதுச் செயலா் முல்லை மஜித் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுலைமான் நன்றி கூறினாா். மாவட்டப் பொதுச்செயலா் எம்.எஸ். சிராஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புச... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க