பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்க...
கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த கல்லூரி மாணவா் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், பேரணி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (19). மயிலத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாமாண்டு பயின்று வந்தாா். இவா், கடந்தாண்டில் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாராம்.
இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த சதீஷ், கடந்த மே 22-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.