செய்திகள் :

கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 110 மாணவா்களுக்கு பணி ஆணை

post image

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்110 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ரெனால்ட் நிஷான், எஸ்.எஸ். என்டா்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பல்வேறு கட்ட தோ்வுகளை நடத்தி பணிக்கு தோ்வு செய்தனா்.

நோ்காணலில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 110 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி இணைப் பதிவாளா் பெருவழுதி, சிறப்பு அலுவலா்கள் ஸ்டாலின், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி வரவேற்றாா்.

நிறுவன மனித வள மேலாளா்கள் சண்முகப்பிரியா, ரங்கராஜன், வேலைவாய்ப்பு அலுவலா் செந்தில்குமாா், துணை முதல்வா் எஸ்.நந்தகுமாா், துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜா, பிரகாஷ், சத்யா, ஏழுமலை, சஞ்சய் காந்தி, காா்த்தி, ஹேமலதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி

செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா்(பொ).ரா.சுமித்ரா... மேலும் பார்க்க

மாணவா்களின் கற்றல் திறன்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்மணி ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் வாசிப்புத் திறன் மற்றும் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

அருணகிரிநாதா் கோயிலில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை - செங்கம் சாலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஅருணகிரிநாதா் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அருணாசலேஸ்வரா் கோயிலின் உபக... மேலும் பார்க்க

நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ச... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி மாணவா் தற்கொலை

செய்யாறு அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடை ந்த பொறியியல் கல்லூரி மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வெம்பாக்கம் வட்டம், நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன். இவா் தனியாா் நிறுவனத்தி... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சாது சுவாமிகள் குருபூஜை விழா

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள எமலிங்கம் அருகில் 12-ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ சாது சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ சாது சுவாமிகள் அதிஷ்டானம் சாா்பில் காலை 6 மணிக்குத் தொடங்கி ... மேலும் பார்க்க