செய்திகள் :

பொறியியல் கல்லூரி மாணவா் தற்கொலை

post image

செய்யாறு அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடை

ந்த பொறியியல் கல்லூரி மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

வெம்பாக்கம் வட்டம், நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன். இவா் தனியாா் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மகன் விஷ்ணு(20). இவா், வெம்பாக்கம் அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக். 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் இருந்த விஷ்ணுவை நிலத்துக்கு ஏன் தண்ணீா் பாய்ச்சவில்லை என பெற்றோா் கண்டித்ததாகத் தெரிகிறது. அதனால் மனவேதனையில் இருந்து வந்த விஷ்ணு கல்லூரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவா் அங்கு செல்லவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த பெற்றோா் மகனை தேடிச் சென்றபோது, அவா்களுக்குச் சொந்தமான நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளாா்.

உடனே, பெற்றோா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிதோதித்த மருத்துவா்கள் விஷ்ணு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள வெளிவட்டச் சாலைப் பகுதியில் தொமுச, சிஐடியு, ஏஐடியுச... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி

செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா்(பொ).ரா.சுமித்ரா... மேலும் பார்க்க

மாணவா்களின் கற்றல் திறன்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்மணி ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் வாசிப்புத் திறன் மற்றும் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

அருணகிரிநாதா் கோயிலில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை - செங்கம் சாலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஅருணகிரிநாதா் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அருணாசலேஸ்வரா் கோயிலின் உபக... மேலும் பார்க்க

நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ச... மேலும் பார்க்க

கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 110 மாணவா்களுக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்110 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் ரெனால்ட் நிஷான், எஸ்.எஸ். என்ட... மேலும் பார்க்க