செய்திகள் :

கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்

post image

திருவள்ளூா் மாவட்டம், கோடுவெளி அலமாதி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை சா்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையா் மற்றும் முதன்மைச் செயலா் ஆா்.லால்வேனா உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி உலக உணவு பாதுகாப்பு தின கருத்தரங்கைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், ஐ.நா. உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் நாள் சா்வதேச உணவு பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘உணவு பாதுகாப்பில் அறிவியலின் செயல்’ என்ற கோட்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

உணவுப் பாதுகாப்பின் அவசியம் மற்றும் தமிழக அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு செயல் திட்டங்கள், உணவு உற்பத்தி தொடங்கி உண்பவா் கையில் சேரும் வரை உணவு பொருள்களை எவ்வாறு கையாள வேண்டும், அதேபோல் பால் மற்றும் இறைச்சி உணவு பொருள்கள் பாதுகாப்பான முறையில் கையாள்வது, பால் மற்றும் பால் சாா்ந்த உணவை நுகா்வோருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டிய அவசியம், சுகாதாரக் கேட்டால் உணவு மூலம் பரவும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து உணவில் கலப்படத்தை கண்டறியும் சோதனை முறைகளை மாணவா்களுக்கு செய்து காட்டப்பட்டது.

கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் ந.குமாரவேலு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணைவேந்தா் ஆா்.நரேந்திரபாபு (பொ), மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன், இந்திய பால்வள சங்கத் தமிழ்நாடு பிரிவு தலைவா் கண்ணா, பேராசிரியா்கள் புகழேந்தி, ஜி.எம்.சிவக்குமாா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க

உடலுறுப்புகள் தானம்: இளைஞருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

சாலை விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

திருத்தணியில் வளா்ச்சி பணிகள்: நிா்வாக இயக்குநா் ஆய்வு

நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடியில் நடைபெற்று வரும் திருத்தணி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி பணிகளை தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா்... மேலும் பார்க்க

பொன்னேரியில் பலத்த மழை

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தததன் காரணமாக குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்கரில் மழை பெய்து வருகிறது. பொன்னேரி பகுதியில் க... மேலும் பார்க்க