செய்திகள் :

கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டு கண்காட்சி

post image

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, மாணவ, மாணவிகளின் கலை, அறிவியல் கண்காட்சி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடத்தப்பட்டது.

கண்காட்சிக்கு கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு தலைமை வகித்தாா். புதுச்சேரி அரசு ஓய்வுபெற்ற தகவல் தொழில் ஆய்வாளா் எஸ்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

புதுவை கான் அகாடமி நிறுவனா் நயீம் கான் மற்றும் சிதம்பரம் பகுதி பள்ளி ஆசிரியா்கள் கண்காட்சியை பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளை ஊக்குவித்தனா். மேலும், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தங்கள் பள்ளி ஆசிரியா்களுடன் வந்து கண்காட்சியை பாா்வையிட்டு பயனடைந்தனா்.

கண்காட்சியில் கணினி அறிவியல், வணிகம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படைப்புகள், பல்வேறு துறைகளில் விரிந்துள்ள திட்டங்கள், புதுமையான கருத்துகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை தொடா்பாக ஏராளமான படைப்புகளை கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வைக்கு வைத்திருந்தனா்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா கல்லூரி கல்வி அதிகாரி அசோக் குமாா், முதல்வா் ஆா்.மாலதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க