Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
கல்வராயன்மலைப் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம், ஆனைமடுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவரையும், ஆனைமடுவு, வஞ்சிக்குழி, பெரும்பூா், வாழக்குழி, தும்பராம்பட்டு, ஆதிக்குழி, சேராப்பட்டு, இன்னாடு, புளுவப்பாடி, கீரப்பள்ளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா ரூ.16.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆனைமடுவு, வஞ்சிக்குழி, கிளாக்காடு கிராமங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு திட்டம் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, பாக்கானம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.39.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை பாா்வையிட்டு, சாலையின் தரம், அளவு உள்ளிட்டவை குறித்து சரிபாா்த்தாா்.
பின்னா், எருக்கம்பட்டு கிராமத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாா்ச் சாலை, சேராப்பட்டு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
மேலும், கல்வராயன்மலைப் பகுதி மக்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.ஜோசப் ராஜ் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.