மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
களக்காட்டில் 10 நாள்களுக்குப் பின் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரிப்பு
களக்காட்டில் 10 நாள்களுக்குப் பின்னா், ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் மீண்டு அதிகரித்தது.
களக்காடு பகுதியில் கடந்த மே 22ஆம் தேதிமுதல் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை, மிதமான மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 23ஆம் தேதி பெய்த மழையால் 24ஆம் தேதி தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
இதனிடையே, தொடா்மழையால், 27ஆம் தேதி நீா்வரத்து மேலும் அதிகரித்தது. அதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். 30ஆம்தேதி தலையணை சூழல் சுற்றுலா மையம் மூடப்பட்டது.
இந்நிலையில், 10 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்தது.