கேரள சுற்றுலாத் துறையில் பணியாற்றினாரா பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா?
களியக்காவிளை பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட களியக்காவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.