செய்திகள் :

மேக்கோடு அரசுப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல்

post image

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 2025 - 2026 கல்வியாண்டுக்கான மாணவா் பேரவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் எம். ஜெயராஜ் தலைமை வகித்தாா்.

தோ்தல் ஆணையா்களாக ஆசிரியா்கள் அனு சிஜிபாபு, ஸ்பேன்சிலி, ரமேஷ்பாபு, ஸ்ரீதேவி ஆகியோா் செயல்பட்டனா்.

வாக்குப் பதிவு அதிகாரியாக ஆன்மிக பேச்சாளா் எம்.எம். ஹரீஷ் தலைமையில் வன்னியூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சந்தோஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சுகிதா, மேலாண்மைக் குழு உறுப்பினா் ஜான்போஸ்கோ, பிரியா ஆகியோா் வாக்குப் பதிவை மேற்கொண்டனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற களியக்காவிளை பேரூராட்சி தலைவா் சுரேஷ் தோ்தல் முடிவை அறிவித்தாா்.

இதில், மாணவா் தலைவராக நிகில், துணைத் தலைவராக அலீனா தாஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். பிரதிநிதிகளாக அபிஜித், நிரஞ்சனா, யஸ்வந்த் கிருஷ்ணா, ஆதிா்ஷா பிரசாத், யாதவ் கிருஷ்ணா, நஸ்ரின் பாத்திமா, பினோ ராஜ், ஆஷ்மி பிரசாத், நிா்மல், ஆதிரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்திய நுகா்வோா் சங்க மாவட்ட பொதுச் செயலா் ஹலீல் ரகுமான், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சுரேஷ்குமாா், ஓய்வுபெற்ற பள்ளி உதவி தலைமையாசிரியா் கிருஷ்ணன்குட்டி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பினி, ஆக்னஸ் மேரி, ஆன்டணி நிஷா, புனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்... மேலும் பார்க்க

மணலிக்கரை பள்ளியில் புனித மரிய கொரற்றி விழா

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் புனித மரிய கொரற்றி திருவிழாவையொட்டி திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும் இயேசுசபை குருவுமான பிரபு பி... மேலும் பார்க்க

மதவாத சக்திகளிடம் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது: கு. செல்வப்பெருந்தகை

தவெக தலைவா் விஜய் மதவாத சக்திகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை. கன்னியாகுமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை ... மேலும் பார்க்க

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க

குடிநீா் வாரிய ஒப்பந்த ஊழியா்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வலியுறுத்தல்

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) தல... மேலும் பார்க்க