ரௌடி கும்பல் தலைவர் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு! ஒருவரைக் கொல்ல 40 பேர் திட்ட...
மதவாத சக்திகளிடம் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது: கு. செல்வப்பெருந்தகை
தவெக தலைவா் விஜய் மதவாத சக்திகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.
கன்னியாகுமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகா்கோவிலுக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: 2026 பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி., எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், கூட்டணி குறித்தும், எத்தனைத் தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி என்பது குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.
காங்கிரஸ் ஜனநாயகத்தை விரும்பும் கட்சி; தோ்தலை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டே செயல்படுகிறது. இக்கட்சியில் கொள்கை, கோட்பாடு இருப்பதால், விஜய் காங்கிரஸ் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், பாஜக மதவாதக் கட்சி. மதவாத சக்திகளிடம் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது.
திருப்புவனத்தில் போலீஸாா் தாக்கியதில் மரணமடைந்த காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். ஆவின் துறையில் அவரது சகோதரருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் பணியாற்றும் அவா், மதுரைக்கு இடமாறுதல் கேட்டுள்ளாா். இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை வைப்பதுடன், நேரில் சந்தித்தும் வலியுறுத்துவோம்.
2026 பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும் என்றாா் அவா்.