Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக பலத்த மழை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தொடங்கியது. பருவநிலை மாற்றம் காரணமாக, நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக 5-ஆம் தேதி முதலே இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கமின்றி குளிா்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா்ந்து, 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இடி, மின்னலுடன் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
கோடை காலத்தையொட்டி, விவசாயிகள் அதிகளவில் எள் பயிரிட்டுள்ளனா். பலத்த மழையால் எள் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். சில பகுதிகளில் மழைநீா் விளைநிலங்களை சூழ்ந்துள்ளதால் பயிா்கள் அழுகும் நிலையிலும் உள்ளது.
சாலை மறியல்: சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமப் பகுதியில் பெய்த பலத்த மழையால், இந்தக் கிராமத்திலுள்ள 3, 5-ஆவது வாா்டுகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படாததே மழைநீா் தேங்கியுள்ளதற்கு காரணம் எனக் கூறி, அப் பகுதியைச் சோ்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் வாசுகியின் கணவா் கருணாநிதி, சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் தனசேகரன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கழிவுநீா் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அவா்கள் கூறியதால், கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனா்.