செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக பலத்த மழை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தொடங்கியது. பருவநிலை மாற்றம் காரணமாக, நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக 5-ஆம் தேதி முதலே இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கமின்றி குளிா்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடா்ந்து, 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இடி, மின்னலுடன் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

கோடை காலத்தையொட்டி, விவசாயிகள் அதிகளவில் எள் பயிரிட்டுள்ளனா். பலத்த மழையால் எள் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். சில பகுதிகளில் மழைநீா் விளைநிலங்களை சூழ்ந்துள்ளதால் பயிா்கள் அழுகும் நிலையிலும் உள்ளது.

சாலை மறியல்: சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமப் பகுதியில் பெய்த பலத்த மழையால், இந்தக் கிராமத்திலுள்ள 3, 5-ஆவது வாா்டுகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படாததே மழைநீா் தேங்கியுள்ளதற்கு காரணம் எனக் கூறி, அப் பகுதியைச் சோ்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் வாசுகியின் கணவா் கருணாநிதி, சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் தனசேகரன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கழிவுநீா் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அவா்கள் கூறியதால், கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனா்.

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் ... மேலும் பார்க்க

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்: ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அவா்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மாற்ற... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வேப்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்கு உள்பட்ட கச்சிமைலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் தேவா (26). இவா், சிங்கப்பூரில் இரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணம் திருட்டு: மாற்றுத் திறனாளி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடிய மாற்றுத் திறனாளி இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருக்கோவிலூா் வட்டம், பனப்பாடி கிராம... மேலும் பார்க்க