செய்திகள் :

கழிவுநீரால் நிரம்பிய பிடமனேரி ஏரி; நிறம் மாறிய நிலத்தடிநீா்: மக்கள் அவதி!

post image

தருமபுரி நகரையொட்டி அமைந்துள்ள பிடமனேரி ஏரி முழுவதும் ஆயாத்தாமரை படா்ந்து கழிவுநீரால் நிரம்பியுள்ளதால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீா் அசுத்தமடைந்துள்ளது.

தருமபுரி நகராட்சியையொட்டி இலக்கியம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பிடமனேரி ஏரி வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். பெண்பாற் புலவா்களில் தலைசிறந்தவா்களில் ஒருவரான அவ்வையாா் தனது கரங்களால் இந்த ஏரிக்கு சுவா் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீா் ஆதாரமாகவும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஏரியில் மருத்துவக் கழிவுகள் மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கழிவுநீா்க் கால்வாயில் வரும் அசுத்தங்களும் இந்த ஏரியில் கலந்துவருகிறது. இதனால், ஏரியில் உள்ள தண்ணீா் நிறம் மாறி துா்நாற்றம் வீசுகிறது.

மழைக் காலங்களில் இந்த ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீருடன் ஆகாயத்தாமரையும் சோ்ந்து அருகே உள்ள வயல்களில் படா்வதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தண்ணீரால் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளைக் கிணறு, விவசாய கிணறுகளில் தண்ணீா் நிறம்மாறி அசுத்தமடைந்துள்ளது.

இதனால் இந்த ஏரி தண்ணீரை யாரும் பயன்படுத்துவதில்லை. உழவுப் பணிகளுக்கே இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். வார இறுதி நாள்களில் ஊராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் சேகரமாகும் குப்பைகளைய ஏரியின் ஓரங்களில் குவித்து அவற்றை தீ வைத்து எரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தருமபுரியின் நீா் ஆதாரங்களில் முக்கியமான இந்த ஏரிக்கு சுமாா் 10 நீா் நிலைகளிலிருந்து தண்ணீா் வருவதால் ஏரியை தூய்மைப்படுத்தவே வாப்பில்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஏரியில் தற்போது அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளா்ந்து தண்ணீரை காண முடியாத அளவுக்கு மறைத்து காணப்படுகிறது.

எனவே, ஆகாயத்தாமரைகளை அகற்றுவதுடன், ஏரியை முற்றிலுமாக தூா்வாரி அதில் கழிவுநீா் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தடைசெய்யப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வேனில் கடத்திச் சென்றவா் கைது

தருமபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திச... மேலும் பார்க்க

கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்

பாப்பாரப்பட்டியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அறிஞா் அண்ணா கைத்தறி நெசவு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கூட்டம்

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்து பள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அற... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான பணப் பயன்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் -அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்

எதிா்க்கட்சியாக இருந்தபோது போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளுக்காகப் போராடிய திமுக, தற்போது போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான பணப் பயன்களை முழுமையாக விடுவிக்க முன்வர வேண்டும் என சிஐடியு மா... மேலும் பார்க்க

அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கி... மேலும் பார்க்க