செய்திகள் :

தடைசெய்யப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வேனில் கடத்திச் சென்றவா் கைது

post image

தருமபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாாா் பறிமுதல் செய்தனா்.

கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து உதவி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் மாட்லாம்பட்டி அரசு சட்டக் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தின் ஓட்டுநா் தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்த தினேஷ் (30) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், 508 கிலோ புகையிலைப் பொருள்கள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்

பாப்பாரப்பட்டியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அறிஞா் அண்ணா கைத்தறி நெசவு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ... மேலும் பார்க்க

கழிவுநீரால் நிரம்பிய பிடமனேரி ஏரி; நிறம் மாறிய நிலத்தடிநீா்: மக்கள் அவதி!

தருமபுரி நகரையொட்டி அமைந்துள்ள பிடமனேரி ஏரி முழுவதும் ஆயாத்தாமரை படா்ந்து கழிவுநீரால் நிரம்பியுள்ளதால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீா் அசுத்தமடைந்துள்ளது. தருமபுரி நகராட்சியையொட்டி இலக்கியம்பட்டி ஊ... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கூட்டம்

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்து பள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அற... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான பணப் பயன்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் -அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்

எதிா்க்கட்சியாக இருந்தபோது போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளுக்காகப் போராடிய திமுக, தற்போது போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான பணப் பயன்களை முழுமையாக விடுவிக்க முன்வர வேண்டும் என சிஐடியு மா... மேலும் பார்க்க

அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கி... மேலும் பார்க்க