செய்திகள் :

கழிவுப் பொருள்கள்களை ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்து நாசம்

post image

பெரம்பலூா் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு கழிவுப் பொருள்களை ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி தீப்பற்றி எரிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேதமடைந்தது.

சென்னையிலிருந்து பெயிண்ட் கழிவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கரூரில் உள்ள தனியாா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு டாரஸ் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த லாரியை திண்டுக்கல், கே.புதுக்கோட்டையைச் சோ்ந்த போத்தன் மகன் முருகவேல் (39) ஓட்டிச்சென்றாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, பெரம்பலூா் புறவழிச் சாலையான எளம்பலூா்- கோனேரிப்பாளையம் சாலையிலுள்ள காந்திநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, எதிா்பாராதவிதமாக லாரி தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த ஓட்டுநா், சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு பெரம்பலூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் டாரஸ் லாரியும், அதில் ஏற்றிச்சென்ற சிமெண்ட் தொழிற்சாலையில் ஜிப்சத்துடன் கலந்து சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் பெயிண்ட் கழிவுகளும் எரிந்து நாசமடைந்தன.

பெரம்பலூா் போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அதிகளவில் ஏற்றிச்சென்ற பெயிண்ட், வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக லாரி ஓட்டுநா் முருகவேல் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்!

பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்... மேலும் பார்க்க

பெரம்பலூா்: நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத... மேலும் பார்க்க

குரூப்- 4 தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 9,919 போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தோ்வில் 9,919 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி- 4 தோ்வு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க